ஒற்றைவரிதான்
ஓராயிரம் தடவை
ஒத்திகை பார்த்துவிட்டாய்
என்னைமறந்துவிடு -என்று
என்னிடம் சொல்வதற்கு!
நாகரீகம் தெரியாதவள்
கொஞ்சம் கூட
நாகரீகம் தெரியாதவள் நீ
என் இதய வீட்டுக்குள்
வரும்பொழுது
கேட்டுவிட்டும் வரவில்லை
திரும்ப செல்லும் பொழுது
சொல்லிவிட்டும்
போகவில்லை.